இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  தலையெழுத்து - சிறுகதை  “சரி! சரி! பேசாம போ! இதுக்கு மேல குதிச்சுகிட்டு இருந்தேன்னா எனக்கு பொல்லாத கோபம் வந்துடும்!” திடுக்கிட்டுப் போனான் மாணிக்கம். “டேய், நீ யாரிடம் என்னடா பேசுகிறாய்? நான் உன்ன பெத்த அப்பன்’டா!” கத்தினான் அவன். “அதனால்தான் வெறும் பேச்சோட நிறுத்திக்கிறேன். இல்லேன்னா நடக்கிறதே வேற! அப்பன் மாதிரியா நீ நடந்து கொள்கிறாய்? தினம் தினம் குடிச்சுட்டு வந்து அம்மாவை நாய அடிக்கிற மாதிரி போட்டு அடிக்கிறாயே!” பதிலுக்கு கத்தினான் சந்திரன். அப்பனை விட அவன் குரல் ஓங்கியே ஒலித்தது. இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் பீறிட்டு வந்தது சந்திரனுக்கு. அப்பன் மூஞ்சியில் ஓங்கி குத்த வேண்டும் என்று கை பரபரத்தது! “என் பெண்டாட்டியை நான் அடிப்பேன். உதைப்பேன். அதைக் கேக்க நீ யாருடா? தருதலைப் பய மவனே!” குடி வெறியில் ஆக்ரோஷமாகக் கத்தினான் மாணிக்கம். அவனும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. “வேண்டாம்’பா! விட்டுடு. அவர்தான் குடிச்சுட்டு வந்து சத்தம் போடுகிறார் என்றால் நீயும் அவர் கிட்ட மல்லு கட்டிகிட்டு நிற்கிறாயே!” சந்திரனை சமாதானப் படுத்த முயன்றாள் தாயார் மாரியாயி. எங்கே அப்பனும்...